அக்டோபர் 15, 2006


எளியவனின் வணக்கம்!

அக்டோபர் 15, 2006

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நகரத்தார் பெருமக்கள் அனைவருக்கும் இந்த எளியவனின் வணக்கம்!

நமது நடப்புச் செய்திகளையும்,

நம் மனதிற்கிசைந்த கவிதைகளையும், பாடல்களையும், நல்ல கதைகளையும் உங்களுடன் பரிமாறிக் கொள்வதற்காக அடியவனின் சிறுமுயற்சிதான் இந்த வலைப்பூ!

எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அது சுவாரசியமாகவும் படிப்பவர்களின் மனதை நெகிழவைப்பதாகவும் இருக்கவேண்டும் – எழுத்திற்கு அடைப்படை அதுதான்.

அதை நன்கு புரிந்து கொண்டவன் என்ற முறையில் உங்களுக்காக எழுத விழைந்துள்ளேன்.

வாழ்த்தியருள வேண்டுகிறேன்

அன்புடன்

வீரப்பசெட்டி சுப்பிரமணியன்